சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரதுதிருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவைஅனுசரித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிலையைத்திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலை திறப்பு
Advertisment