Skip to main content

''உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பு சாசன சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்'' -ரவிக்குமார் எம்.பி பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

'' Ambedkar is the creator of the largest constitutional law in the world '' Ravi Kumar MP speech!


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மொழிப்புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் விழாவைத் துவக்கி வைத்துப் பேசினார்.

 

சிறப்பு விருந்தினராக விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிப் பேசுகையில், ''இந்த பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்காக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தைச் சிதம்பரத்தில் தான் அமைக்க வேண்டும் என்று 1933-ஆம் ஆண்டு அப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்த சுவாமி சகஜானந்தா, பல்கலைக்கழகம் அமைக்க இடத்தை பார்வையிட வந்த குழுவினரிடம் வலியுறுத்தியதன் பேரில் இங்கு தமிழுக்காக இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில், ''அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் அமைக்கும் அமர்வுக்கு வருவதற்கு பல்வேறு போராட்டங்களையும் இன்னல்களையும் கடந்து வந்துள்ளார். எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. அப்படி வந்தவர் அமர்வுக்குத் தலைவரானார். உலகத்திலே மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து வழங்கியுள்ளார். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி வழங்கிய இந்த நாளை போற்றி உறுதியேற்போம்'' என அவர் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன், பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய முதல்வர்  ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வாறு குரல் கொடுத்துள்ளார் என்பதை விளக்கிப் பேசினார்கள்.

 

பல்கலைக்கழக  அம்பேத்கர் இருக்கையின் சார்பில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்-2021 தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டி போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் சௌந்தரராஜன் ,துணை பேராசிரியை.ராதிகாராணி செய்திருந்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழக புல முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.