Skip to main content

மாணவன் தற்கொலை! போக்சோவில் கைதான பெண் ஆசிரியர்! 

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

Ambattur student passed away police arrested Female teacher

 

சென்னை, அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்த்த 16 வயது மாணவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு, மாநில கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்துள்ளார். இவர், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்த கலந்தாய்வு தேர்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகு தனது படுக்கையறைக்கு சென்ற அந்த மாணவன், தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்துவர்கள் உடனடியாக சென்று அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும், இந்தத் தகவல் அம்பத்தூர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கினர். மேலும், மாணவன் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்தனர். அதில் அந்த மாணவன் படித்து வந்த அதே பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் பெண் ஆசிரியையுடன் அதிக நேரம் பேசி வந்ததும், நெருங்கி பழகி வந்ததும் தெரியவந்தது. மேலும், இருவரும் தனிமையில் எடுத்துகொண்ட புகைப்படங்களும், செல்ஃபிகளும் செல்போனில் இருந்துள்ளது. 

 

அதனைத் தொடர்ந்து அந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஆசிரியை மாலையில் தனியாக டியூஷன் நடத்தி வந்துள்ளார். அந்த டியூஷனில் இந்த மாணவனும் சேர்ந்து படித்துவந்துள்ளார். அப்போது அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, பிறகு அது காதலாக மாறியுள்ளது. ஆசிரியை, மாணவனுடன் பலமுறை தனிமையில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த ஆசிரியை தனக்கு மாணவனுடன் பழக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும், விசாரணையில் ஆசிரியைக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானதும், அதனால் அவர் மாணவனுடன் பேசுவதை நிறுத்தியதும், அதில் மன உளைச்சலில் இருந்த மாணவன் இந்த தற்கொலை முடிவை எடுத்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.