Skip to main content

அதிசய பிறவி மாணவன் நெற்றிக்கண் தண்டபாணி !

Published on 24/01/2020 | Edited on 25/01/2020

புராண கதைகளில் சிவனுக்கு 3வது கண்ணாக நெற்றிக்கண் இருப்பதை படித்த நமக்கு கடவுளின் மீது அசாத்திய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் 3வது கண்ணாக அறிவுக்கண் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலையை அடுத்த கிருஷ்ணரைாயபுரம் அருகே உள்ள கோவக்குளம் ஜெயபால் ஒரு விவசாயி. இவருடைய மகன் தண்டாபணி பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.

 

Amazing Student

 

பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் வேல்முருகன் என்பவரிடம் தண்டபாணி பயிற்சி வகுப்பு சேர்ந்துள்ளார்.  வேல்முருகனின் தனிப்பயிற்சி தண்டபாணி தனக்கு 3வது கண் இருப்பதை அறிந்து கொண்டுள்ளான்.  இதை தன் பள்ளி ஆசிரியர்களிடம் இதை பற்றி சொல்லும் போது அவர்கள் அனைவரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்திருக்கிறார்கள்.

தண்டபாணியை சோதித்து பார்ப்பதற்காக ஆசிரியர்கள் கண்களை கட்டிவிட்டு தண்டாபணி ஒவ்வொருத்தராக நிறுத்தி இவர் யார் என்று ஒவ்வொருவரையும் கேட்டிருக்கிறார்கள். தண்டபாணியே கண் திறந்து பார்ப்பதை போன்று மிகச்சரியா சொல்லி ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளான்.

 

Amazing Student


இதே போன்று கண்களை கட்டிக்கொண்டு பாடபுத்தகத்தில் உள்ள எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்கள், விசிட்டிங் கார்டுகளில் உள்ள எழுத்துகள், சொல்போன்களில் உள்ள புகைப்படங்கள், என அனைத்தையும் கண்களை கட்டிக்கொண்டு நேரில் பார்ப்பதை பார்த்து சொல்ல தண்டபாணியை நெற்றிக்கண் தண்டாபணி என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

 

Amazing Student

 

இது குறித்து பயிற்சியாளர் வேல்முருகன் முறையான பயிற்சி எடுத்தால் படிப்பில் ஆர்வம் பிறக்கும், நல்ல எண்ணம், நல்ல ஒழுக்கம்,வளர்ந்து இது போன்ற அதிசயங்கள் நடக்க சாத்திய முள்ளது என்றார்.

இரண்டு கண்களை கட்டி நெற்றிக்கண் என்னும் அறிவுக்கண்களில் பார்த்து சொல்லும் தண்டபாணி தற்போது அதிசய பிறவியே !

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.