ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசையான இன்று மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் ஏராளமான பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.