(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இயக்குனர் சுசி கணேசன் மீது லீலா மணிமேகலை மீடூ குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் திருட்டுப்பயலே-2 படத்தில் இயக்குனர் சுசி கணேசனால் பல்வேறு சங்கடங்களை அனுபவித்ததாகவும், மேலும் தன்னிடம் அவர் இரட்டை அர்த்த தொனியில் பேசினார் என்றும் நடிகை அமலா பால் புகார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுசி கணேசன் காரணம் இல்லாமல் உரசிபேசும் மனப்பான்மை கொண்டவர் எனவும் தெரிவித்துள்ள அமலாபால், அவர் மீதான குற்றசாட்டை தைரியமாக வெளியில் சொன்ன லீலா மணிமேகலைக்கு பாராட்டுக்கள் எனவும், இதனால் பெண்களுக்கு சரியான பாதுகாப்பிற்கான வழிவகைகள் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.