Skip to main content

சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை! மருத்துவமனைக்கே சென்று பள்ளி தாளாளருக்கு 15 நாள் காவல் விதித்த நீதிபதி!   

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Amala corespondent arrested

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விராரெட்டிகுப்பம் கிராமத்தில் அமலா சிறுவர்-சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

 

இங்கு தங்கியிருந்த மூன்று மாணவிகள் காணாமல் போனதாக அப்பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ்ராஜா அக்டோபர் 25-ஆம் தேதி ஆலடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமிகளை தேடி கண்டுபிடித்து, சிறுமிகளை கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (போக்ஸோ) ஆஜர்படுத்தினர். அப்போது அந்த சிறுமிகளிடம் நீதிபதி எழிலரசி விசாரணை மேற்கொண்டார்.  

 

விசாரணையில் பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா, மூன்று சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். அதையடுத்து 10.11.2021 அன்று ஜேசுதாஸ்ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அமலா சிறுவர் சிறுவர் சிறுமியர் இல்லத்தில் இருந்த 40 பேரும் கடலூர் அரசு சிறுமியர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அதன் பின்னர் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார் அமலா பள்ளிக்கு சென்று ஆவணங்களை ஆய்வு செய்தனர். அந்த இல்லத்தில் 198 மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். அதில் 67 பெண்கள், 136 ஆண்கள் இருந்தனர். அவர்களுக்கு அட்மிஷன் போடப்பட்ட விவரம், வெளியே அனுப்பிய விவரங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். அதில் மாணவர்கள் அட்மிஷன் போடப்பட்ட விவரங்கள் சரியாக இருந்தன. ஆனால் அவர்களை வெளியே அனுப்பிய விவரம் சரியாக இல்லை. தற்போது உள்ள 29 மாணவர்களின் விவரங்களையும் சோதனை செய்தார். மூத்த குடிமக்கள் 9 பேர் தங்கியுள்ள இல்லத்தைப் பார்வையிட்டு அவர்களின் ஆவணங்களை சரிபார்த்தார். அதிலும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சிறுவர்-சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.  


இந்நிலையில் ஜேசுதாஸ்ராஜாவுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் கைதான அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் ஜேசுதாஸ் ராஜாவை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியவில்லை. அதையடுத்து கடலூர் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி நேற்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையிலிருந்த ஜேசுதாஸ் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.