Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அல்வா கொடுத்த விவசாயி தங்க சண்முக சுந்தரம் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்க கூடாது என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை வைத்தார்.

 

 Alva's protest against the hydrocarbon project


மேலும் அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம் தடை செய்ய வேண்டிய அவசியம் குறித்து கூறுகையில் அரியலூர் மாவட்டம் டெல்டா மாவட்டம் ஆகும். இந்த டெல்டாவை பாதிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு இயற்கையான சாண எரிவாயு நிலையம் கிராமங்கள் தோறும் பொது இடங்களில் கட்டுமானம் அமைக்க வேண்டும். அதன் மூலம் அதிகளவில் மாடுகள், ஆடுகள் உள்ள அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த முன் வரும் போது மாநில அளவில் வீடுகள் தோறும் இயற்கை எரிவாயு தந்த முதன்மையான மாவட்டம் என பெயரெடுக்கலாம். 

மேலும் இந்த மாதிரியான நடவடிக்கை மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முடியும் இந்த வகையான சாண எரிவாயு நிலையத்திலிருந்து வெளி வரும் கழிவுகளை பயன்படுத்தும் போது சாதாரணமாக  சாண கழிவுகளை பயன்படுத்தும் போது களை அதிகளவில் வரும் மாறாக, சாண எரிவாயு நிலையம் மூலம் வெளிவரும் கழிவுகளை பயன்படுத்தும் போது களை முழுமையாக வராத அளவிற்கும் களை மேலாண்மை செய்ய இயலும் மேலும் தரமான இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு அன்றாடம் வழங்க முடியும். இதன் மூலம் 100 சதவீத இரசாயனமற்ற வேளாண்மை செய்து நோயற்ற வாழ்வு உறுதி செய்யப்படும்.

 

 Alva's protest against the hydrocarbon project

 

100 ரூபாய் செலவில் மாதந்தோறும் சாண எரிவாயு மூலம் சிலிண்டர் கொடுக்க இயலும். மேலும் காய்கறி கழிவுகள், விவசாயக் கழிவுகள், மனித கழிவு மூலமும் மின்சாரம், இயற்கை எரிவாயு தயாரிக்கும் நிலையங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கிம் மாநிலம் போல் விவசாயிகளுக்கு ஊக்கமளித்து இயற்கை விவசாயத்தில் அரியலூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை கோரிக்கை வைத்தார் தங்க சண்முக சுந்தரம்

மேலும் கூட்டதின் போது,   அரசு அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் அல்வா கொடுத்து ஹைட்ரோ கார்பன் திட்ட த்திர்க்கு எதிர்பை பதிவு செய்தார் பின்புகூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளும்,  மாவட்ட ஆட்சியரிடம் இந்த மண் இராஜேந்திரசோழன் ஆண்ட மண் இந்த மண்ணை காக்க வேண்டும் அரசும், அதிகாரிகளும் விவசாயிகளை ஏமாற்றுவதற்கு அல்வா கொடுப்பதுபோல ஹைட்ரோகார்பன் திட்டத்தை எங்கள் மீது திணித்து எங்களை ஏமாற்ற வேண்டாம் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று ஒருமித்த குரலில் மாவட்ட ஆட்சியரிடம் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.