Skip to main content

“திருப்பதிக்கு இணையாக பழனி கோவிலிலும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Along with Tirupati, facilities will also be provided to the devotees in the Palani temple says sakkarapani

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி ஞான தண்டாயுதபாணி திருக்கோவிலில் ஏற்கனவே இரண்டு இழுவை ரயில் உள்ளது. தற்போது புதிதாக மூன்றாவது மின் இழுவை ரயிலை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் கோவில் இணைய ஆணையர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ad

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மூன்று மின் இழுவை இரயில்கள் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன. முதலாவது மின் இழுவை இரயில் 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் ஒரு முறை 40 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 3,200 பக்தர்கள் பயணம் செய்யலாம். இரண்டாவது மின் இழுவை இரயில் 1982-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதில் ஒரு முறை 32 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,560 பக்தர்கள் பயணம் செய்யலாம். மூன்றாவது மின் இழுவை இரயில் 1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் ஒரு முறை 36 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,880 பக்தர்கள் பயணம் செய்யலாம். 

மூன்றாவது மின் இழுவை ரயிலில் அதிக பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் மின் இழுவை இரயில் பெட்டிகள் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தொலைக்காட்சி, மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டியும் ஒரே நேரத்தில் 72 பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Along with Tirupati, facilities will also be provided to the devotees in the Palani temple says sakkarapani

இதற்கான பணிகள் 27.04.2023 முதல் மேற்கொள்ளப்பட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டு, தகுதிச் சான்று பெறப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 பக்தர்கள் வரை பயணம் செய்ய இயலும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்கும் விடுதிகள் நவீனமயத்துடன் கட்டப்படவுள்ளன. திருப்பதிக்கு இணையாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.