ADVERTISEMENT

முழு ஊரடங்கின் போது மருந்து, பால் டெலிவரிக்கு அனுமதி!

09:12 PM Jan 13, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து, அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 31- ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது. அதேபோல், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வரும் ஜனவரி 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்று (13/01/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "வரும் ஜனவரி 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும். இதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பினை நல்குவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT