Skip to main content

"இலங்கை தமிழர்களுக்கு உதவி அனுமதித்திடுக"- பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

"Allow aid to Sri Lankan Tamils" - Chief Minister MK Stalin urges PM!

 

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நேரடியாக உதவ, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதார நெருக்கடியால் தவிக்கும், இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் கொழும்பில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவ, தமிழக அரசு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உயிர் காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்களை தமிழ்நாடு அவர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியறுத்தியுள்ளார். 

 

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல், ஆபத்தான கடல்வழி பயணம் செய்து, பச்சிளங் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் 16 பேர் தமிழகம் வந்திருக்கும் நிலையில், முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

 

இச்சந்திப்பின் போது, 1983 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் இருந்து 3,04,269 ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் சம உரிமை வழங்க இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.