Skip to main content

கூட்டணி சேர்ந்த அதிமுக அமமுக? ; குடந்தை அரசியல் பரபரப்பு

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள உடையாளூர் தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்க தேர்தலில் அதிமுகவும், அமமுகவும் கூட்டணி அமைத்துக்கொண்டது தஞ்சை அரசியல் வட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.

இதுகுறித்து விசாரித்தோம், "கும்பகோணம், திருவிடைமருதுார் கூட்டுறவு சங்கங்களில் இயக்குனருக்கான தேர்தல் நடத்தவேண்டும் என அறிவித்து, கடந்த 2018 ம் ஆண்டு, மார்ச் மாதம் 26 ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் உள்ள திமுகவினரின் வேட்புமனுவை நிராகரித்து விட்டு, அதிமுகவினர் போட்டியின்றி தேர்வானார்கள் என அறிவிக்கப்பட்டது.

 

Allied ADMK AMMK; Politics of Kudanthai

 

இது குறித்து திமுகவினர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பில், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 11 இயக்குனர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்றது.

அந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக மற்றும் அமமுகவினர் நேரடியாக போட்டியிட்டனர். அப்போது அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் நேரடியாக போட்டி எழுந்ததால் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைக்கைப்பற்ற கடும் போட்டியும், வாக்குவாதமும் எழுந்தது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக முற்றி கல் வீச்சு கலவரம் வரை சென்றது. கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டுறவு சங்கத் தேர்தல் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

 

Allied ADMK AMMK; Politics of Kudanthai

 

இந்த நிலையில் மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  3 ம் தேதி உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்திற்கும், வரும் 6 ம் தேதி மருதாநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க அதிமுகவும், அமமுகவும் நேரடியாக உடன்பாடு செய்துகொண்டனர்.

கூட்டணி உடன்படிக்கையின்படி ஏற்கனவே போட்டியிட்ட 11 இயக்குநர்களில் அதிமுகவினர் 6 பேரும், அமமுகவினர் 5 பேரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். வெற்றி பெறும் இயக்குநர்கள்  வரும் 9 ம் தேதி நடைபெறும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை அதிமுகவும், அமமுகவும் பகிர்ந்துகொள்ள ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது". என்கிறார்கள்.

 

Allied ADMK AMMK; Politics of Kudanthai

 

கல் வீச்சு வரை சென்ற உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் அதிமுகவினரும், அமமுகவினரும் பகிர்ந்து கொண்ணடதால் திமுகவினருக்கு இயக்குனர்கள் பதவிகள் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும், அமமுக இணையப்போவதாக கிளம்பி வரும் செய்திகளுக்கு இந்த தேர்தல் வலுசேர்த்துள்ளது என்கிறார்கள் குடந்தைவாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.