Published on 03/02/2021 | Edited on 03/02/2021

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என களத்தில் இறங்கியிருக்கின்றன.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், வரும் தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ''ஒருவேளை தேமுதிகவை இணைக்க வேண்டும் என்ற தேவை இருக்கலாம். கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. மக்கள் நலன் விரும்பும் கட்சியுடன்தான் தேமுதிக கூட்டணி இருக்கும். எனவே திமுகவுடன் கூட்டணி குறித்து காலம்தான் முடிவு செய்யும்'' என்றார்.