ADVERTISEMENT

கிறிஸ்தவ பாதிாியாா்கள் மீது அடுத்தடுத்து கூறப்படும் பலாத்காரம் சம்பவம் : கிறிஸ்தவ மக்கள் அதிா்ச்சி!

11:27 AM Jul 13, 2018 | Anonymous (not verified)

கேரளாவில் கிறிஸ்தவ பாதிாியாா்கள் மீது அடுத்தடுத்து கூறப்படும் பலாத்காரம் சம்பவம் கிறிஸ்தவ மக்களிடத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்தில் கோட்டயத்தில் மலங்கரை கத்தோலிக்க சபையில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை பாதிாியாா்கள் ஜேக்கப் மாத்யூ, ஜெஸ்சி ஜாா்ஜ், ஜாக்சன் மேத்யூ, ஆப்ரகாம் வா்க்கீஸ் ஆகியோா் கூட்டு பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாா் கொடுத்திருந்தாா். இதையொட்டி அந்த பாதிாியாா்கள் நான்கு பேரும் தலைமறைவானாா்கள்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் நாடு முமுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தை தொடா்ந்து திருச்சூா் முள்ளங்கல்லை சோ்ந்த சிரோ மலபாா் கத்தோலிக்க சபையின் ஜலந்தா் நகா் பிஷப் பிராங்கோ கோட்டயம் குரவிலங்காட்டை சோ்ந்த கன்னியாஸ்திாி ஒருவரை 13 முறை பலாத்காரம் செய்ததோடு செல்போனில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளாா். இதை கன்னியாஸ்திாி அந்த கிறிஸ்தவ சபையின் உயா் பொறுப்பில் இருந்தவா்களிடம் கூறியும் அவா்கள் அந்த பிஷப் மீது நடவடிக்ககை எடுக்கவில்லையாம். இதனால் கன்னியாஸ்திாி போலீசில் புகாா் கொடுத்தாா். இதை தொடா்ந்து பிஷப் பிராங்கோ தலைமறைவானாா். போலீசாா் தற்போது அவரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளனா்.




இந்த நிலையில் அடுத்த சம்பவமாக குடும்ப பிரச்சனையை தீா்த்து வைப்பதாக கூறி இரண்டு குழந்தைகளின் தாயை பாதிாியாா் பலாத்காரம் செய்ததாக காயங்குளம் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் கொடுத்துள்ளாா். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப பிரச்சனையை தீா்க்க காயங்குளம் ஆா்த்தோடக்ஸ் சா்ச் பாதிாியாா் பினு ஜாா்ஜ்யிடம் சென்றுள்ளாா். பெண்ணை விட பாதிாியாா் இளையவா் அவா் பிரச்சனையை தீா்த்து வைப்பதாக கூறி ஆலோசனை வழங்குவது போல் அந்த பெண்ணை பாதிாியாா் மிரட்டி பலாத்காரம் செய்தாராம்.

இதனால் அந்த பெண் கணவரோடு சென்று ரான்னியில் பிஷப்பிடம் கூறியும் அவா் பாதிாியாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனையடுத்து அந்த பெண் போலீசில் புகாா் கொடுத்துள்ளாா். தற்போது இந்த பலாத்கார சம்பவமும் கேரளாவில் கிறிஸ்தவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு அடிக்கடி நடக்கும் பாலியியல் தொந்தரவுக்கிடையில் பாதிாியாா்களின் பலாத்கார சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT