Advertisment

டேராடூனில் இருந்து எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபா!

பர

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர். இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தநிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் அவரை தேடி டேராடூன் சென்ற நிலையில், மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று சிகிச்சை பெற்றுவந்த அவர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவர் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்கள்.

Advertisment

police Baba
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe