Skip to main content

அனைத்து கிராமங்களிலும் எருது விழா நடத்த அனுமதி வேண்டும்.. காளை உரிமையாளர்கள் கோரிக்கை

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

All villages need permission to hold a bull festival Bull Owners Request

 

தமிழகம் முழுவதும் இந்த வாரம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். பொங்கல் திருவிழாவில் எருது விடுதல் என்பது முக்கியமானது. மாடுகளைத் துன்புறுத்துகிறார்கள் என பீட்டா என்கிற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு, நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது. அதேவேளையில் தமிழக அரசு, சிறப்பு அரசாணை வெளியிட்டு எருதுவிடுதல் விழாவினை நிகழ்த்த ஒப்புதல் வழங்கியது. இதற்கு பல கட்டுப்பாடுகளையும் அரசு சார்பில் விதிக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் எருது விடுதல் குழுக்கள் தொடங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் எருதுவிடும் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம், தமிழக ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவர் ஆர்.ஆர்.வாசு தலைமையில் ஜனவரி 10ஆம் தேதி நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

 

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த காளை உரிமையாளர் அன்பழகன், “தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மாலை நேரத்தில் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது, அதேபோல் அனைத்து கிராமங்களிலும் நடத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை. தென்மாவட்டங்களைப்போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தாண்டு முதல் எருது விடும் திருவிழாவிற்கு காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெற மாவட்ட ஆட்சியர் அனுமதி  வழங்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி வழங்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாககத்திடம் கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


காளை உரிமையாளர்களின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனு தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.