Advertisment

"என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்"- சு.திருநாவுக்கரசர் வேண்டுகோள்!

publive-image

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதனிடையே, சில நாட்களுக்கு திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகனும் அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

publive-image

இந்த நிலையில் சு.திருநாவுக்கரசர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களில் என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

MP positive thirunavukkarasar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe