Skip to main content

இப்படியெல்லாம் கூட ஒரு மோசடியா? - சென்ட்ரலில் இளைஞரை பிடித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

 Is all this a scam?- Shocking information revealed when a young man was caught standing with a notepad and stamps in Central

 

பண்டிகை தினங்களில் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வட இந்திய இளைஞர்களைக் குறி வைத்து, இளைஞர் ஒருவர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் போலி ரயில் டிக்கெட் கொடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வடமாநிலத் தொழிலாளர்கள் பண்டிகை நாட்களில் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிவார்கள். அந்த நேரத்தில் பலரது டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும். அப்படி வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து உங்களுக்கு சீட்டை கன்ஃபார்ம் பண்ணித் தருகிறேன் எனக்கூறி ஒருவர் மோசடி செய்துள்ளார்.

 

நேற்று மதியம் சென்ட்ரல் புறநகர் முன்பதிவு மையம் பகுதியில் கையில் நோட்பேட், ரப்பர் ஸ்டாம்ப் உடன் நின்ற இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஜா என்று தெரியவந்தது. அவருக்கு இந்தி தெரியும் என்பதால் வட மாநிலப் பயணிகளைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். கொடுங்கையூரில் வசித்து வரும் அவரின் வீட்டுக்குச் சென்ற ரயில்வே போலீசார் ஆய்வு செய்ததில் பல ரப்பர் ஸ்டாம்புகள் நோட் பேட் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ந்தனர்.

 

 Is all this a scam?- Shocking information revealed when a young man was caught standing with a notepad and stamps in Central

 

அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ட்ரெயின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் தவிக்கும் வட மாநில இளைஞர்களைக் குறி வைத்து, தான் ரயில்வே துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொள்வதோடு, துண்டு பேப்பரில் பயணிகளின் பெயர், விவரம், வயது, ரயிலின் பெயர், சீட்டின் எண் ஆகியவற்றை மருத்துவர் மருந்து சீட்டில் எழுதுவதுபோல எழுதி எக்ஸிக்யூட்டிவ் ஆபிஸர் ஆந்திரா என்ற ஒரு சீலை வைத்துக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விடுவார். இதை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் உங்களுடைய சீட்டு உறுதியாகிவிடும் என அனுப்பி விடுவார். இதற்கான பணத்தையும் பெற்றுக் கொள்வார்.

 

ஆனால், இப்படிச் செல்லும் அப்பாவிப் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் இதைக் காட்டினால், இது செல்லாது, போலியானது என ரயிலிலிருந்து இறக்கி விடப்படுவர். இது தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.