Skip to main content

7 விவசாயிகள் மீதான வழக்கை திரும்ப பெற கோரி அனைத்துக்கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்த முடிவு

Published on 06/05/2018 | Edited on 07/05/2018
neduvasal1

    

நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி மத்திய அரசால் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதால் அடுத்த நாள் நெடுவாசல் கிராமத்தில் தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்து நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய கிராமங்களிலும் பரவியது. தொடர்ந்து நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக நேரில் ஆதரவு தெரிவித்த சுற்றவட்டார கிராம விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் அந்தந்த கிராமத்திலும் போராட்டங்களை நடத்தினார்கள். அப்படித் தான் கீரமங்கலத்தில் இதற்காக 5 முறைக்கு மேல் போராட்டம் நடந்தது. அதில் மார்ச் 6 ந் தேதி தொடர் போராட்டம் நடத்த பந்தல் அமைக்கப்பட்டதால் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்துள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

 

    இந்த நிலையில் கடந்த 3 ந் தேதி புளிச்சங்காடு கைகாட்டிக்க சுற்றப்பணயம் வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ விரைவில் நெடுவாசல் போராட்டம் தொடங்க உள்ளது என்று கூறினார். 


    தற்போது ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஒரு வருடத்திற்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்துள்ள தகவலை  வை.கோ, சீமான், ராமதாஸ், மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் கீரமங்கலத்தில் போராட்டக்குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் துரைப்பாண்டியன் தலைமையில், தங்க.கண்ணன் முன்னிலையில் நடந்தது.  அந்த கூட்டத்தில்.. நெடுவாசல் திட்டதிற்காக போராடிய விவசாயிகள், இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யமாட்டோம் என்று பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட அதிகாரிகள், காவல் துறையினர் கூறினார்கள். ஆனால் அவர்கள் சொன்னதற்கு மாறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகளை அச்சுறுத்துவதாக உள்ளது. 


    அதனால் இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். முதல்கட்டமாக நெடுவாசல் போராட்டக்குழுவின் உயர்மட்டக்குழு, மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கூறவது.. அந்த தலைவர்கள் சொல்லும் தேதியில் விரைவில் மிகப் பெரிய போராட்டம் நடத்துவது என்றும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 ந் தேதி நீதிமன்றம் செல்லும் போது வழக்கில் உள்ளவர்களுடன் ஊர்வலமாக செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


    இதனால் விரைவில் மீண்டும் பெரிய போராட்டம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.