Skip to main content

இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது- அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

தொண்டர்களால் அதிமுக வழி நடத்தப்படுகிறது என்றும், கருணாநிதி  குடும்பத்தின் அடிமை இயக்கமாக திமுக மாறிவிட்டது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் உதய ராமசாமி வரவேற்றார். அதுபோல் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச் செல்வனும் கலந்து கொண்டு பேசினார்.
 

இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது, அண்ணாவின் உழைப்பும் எம்ஜிஆருக்கு மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியும் தான், கடந்த 1967 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடிப்பதற்கு காரணமாகும். அண்ணா மறைவுக்குப் பிறகு திமுகவை தனது குடும்பத்தின் அடிமை இயக்கமாக கருணாநிதி மாற்றிவிட்டார். திமுகவினரை அவருடைய குடும்பத்திற்கு உழைக்கும் கரங்கள் ஆகிவிட்டனர். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அவருக்குப் பிறகு இன்பநிதி என்று ஒரே குடும்பத்தால் சுரண்டப்பட்டு திமுக பரிதாபமான நிலைக்கு ஆளாகி கொண்டிருக்கிறது.
 


திமுக என்பது திருக்குறளை முன்னேற்ற கழகம் ஆகிவிட்டது. ஆனால் அதிமுக தொண்டர்களால் நடத்தப்படுகிற ஜனநாயக இயக்கமாக செழித்து நிற்கிறது. அதிமுகவில் தான் சாமானியனும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியும் பச்சை மையில் கையெழுத்து போடும் பாக்கியத்தை தரும் கட்சி அதிமுக. ஆனால் திமுக ஜெகத்ரட்சகன், டிஆர் பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், என செல்வந்தர்களை உயர்த்தும் முதலாளித்துவ இயக்கம் ஆகிவிட்டது.

ALL OVER STATES COMPARE TO TAMILNADU IS FIRST STATE MINISTER SREENIVAASAN


திமுக ஆட்சியில் மின் வெட்டு இருந்தது கொலையும், கொள்ளையும் நில அபகரிப்பும் தலை விரித்தாடுகிறது. ஆனால் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. வறுமை வேலையின்மையை தகர்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அதுபோல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறோம். நாம் யாரையும் அடிமையாக கருத மாட்டோம். அதேவேளையில் யாரிடமும் அடிமையாக இருக்க மாட்டோம்.
 


திமுக ஆட்சிக்காலத்தில் 2006- 2011 வரை தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீட்டாக 26 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் 2011- 2019 ஆண்டுகள் வரை அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் 73 ஆயிரத்து 308 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். வருகிற இடைத்தேர்தலில் அதிமுக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறது என்றும் கூறினார் இக்கூட்டத்திற்கு மாவட்டம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.