அனைத்து வெள்ளாள பிள்ளைமார் மகாசபையின் நிறுவனர் எஸ். ஆறுமுகம் பிள்ளை கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜக கட்சியுடன் கூட்டணியில் இருந்து வருகிறார். வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அவருக்கு ஒரு தொகுதி (மதுரை அல்லது திருச்சி அல்லது திண்டுக்கல்) ஒதுக்குமாறு பா.ஜ.க விடம் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக, அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனை அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.