நடிகர் சரத்குமாரின் அகில இந்தியசமத்துவ மக்கள் கட்சியில் ராதிகா சரத்குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மைத் துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநில முதன்மைத் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சண்முகசுந்தரம் விடுவிக்கப்பட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் பொறுப்பை ராதிகா சரத்குமார் வகித்துவரும் நிலையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.