Skip to main content

கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்!

Published on 07/08/2018 | Edited on 27/08/2018


கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் போக்குவரத்து சட்டதிருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் போக்குவரத்து சட்டதிருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டனத்தை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கள் இனைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் கோவை சார்பில் 12 தொழிற்சங்கள் பங்குபெறுகின்றன. இதனிடையே வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஒட்டுநனர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 

 

மத்திய அரசின் போக்குவரத்து சட்டதிருத்தத்தை எதிர்த்து கோஷமிட்டனர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். விபத்து என்பது எதிர்பாரத விதமாக நடைபெறுவது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அபராதமும் ஒட்டுநனர்களே கட்ட நேரிடும்.

இது அவர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும். மத்திய, மாநில அரசுக்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விலை உயர்வை குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோகள் இயங்கவில்லை," என்றார்.

கோவை மண்டல இருசக்கர வாகன தொழிலாளர்கள் நலச்சங்கம் தொழிலாளர்களும் இதில் கலந்துகொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓடாது!!-ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு

Published on 09/09/2018 | Edited on 09/09/2018
auto

 

நாளை தமிழகம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ உட்பட எந்த ஆட்டோவும் ஓடாது என ஆட்டோ ஓட்டுனார்கள்  சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் பந்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே நாளை தமிழகம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ உட்பட எந்த ஆட்டோவும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் இந்த பந்த்திற்கு தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாளை நடக்கவிருக்கும் இந்த பந்த்தில் 75 ஆயிரம் லாரிகள் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

தமிழகம் முழுவதும் இன்று ஆட்டோக்கள் ஓடாது!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
auto


மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

 

 

மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாமக, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன. லோடு ஆட்டோ, ஒர்க்‌ஷாப், டிரைவிங் ஸ்கூல் போன்ற மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.