Skip to main content

சென்னையில் மின்னிய கடல் அலைகள்! – கெட்ட செய்திக்கான அறிகுறியா?

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் மற்றும் பெசண்ட் நகரிலுள்ள இலியாட்ஸ் கடற்கரைப் பகுதிகளில், ஆகஸ்ட் 18-ந்தேதி இரவு வழக்கத்தைவிட கூட்டம் அதிகமானது. கடல் அலைகளில் நீலநிறத்தில் ஏதோ வித்தியாசமான ஒன்று மின்னுவதைக் காணவே இந்தளவு கூட்டம் கூடியிருக்கிறது. என்ன காரணத்திற்காக கடல் அலைகள் இப்படி மின்னுகின்றன என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை எனினும், வியப்புடன் இதனைக் கண்டு ரசித்துச் சென்றனர்.

 

alka in thiruvanmiyur beach

 

 

கடல் மின்னுதல் என்று சொல்லப்படும் இந்த நிகழ்வுக்குப் பின்னால் இருப்பது, நாக்டிலூக்கா ஆல்கா எனப்படும் ஒருவகை பாசியினம். இந்த ஆல்காக்கள் இயல்பை இழக்கும்போது இதுபோன்ற வண்ணங்களை வெளியிட்டு மின்னுவது வழக்கம். இவற்றில் இருக்கும் லூசிஃபெரன்ஸ் எனப்படும் என்சைம்கள், ஆக்சிஜனோடு வினைபுரிந்து வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட உயிரி வெளிச்ச நிகழ்வுகள் மின்மினி போன்ற சில பூச்சியினங்களில் நடப்பதை நாமே பலமுறை பார்த்திருப்போம். ஆனால், அவற்றைப் போலவே நாக்டிலூக்கா ஆல்காக்கள் மின்னுவதை இயல்பான நிகழ்வாக கருதமுடியாது.

மிக அழகான இந்த நிகழ்வுக்குப் பின்னால் மிகஆபத்தான செய்தி ஒளிந்திருக்கிறது. நாக்டிலூக்கா போன்ற ஆல்காக்கள் அளவுக்கதிகமாக கடல்வாழ் பாசியினங்களை அழிக்கக்கூடியவை. இதனால், கடல்சார் உணவுச்சங்கிலி சிதைந்து போகும் வாய்ப்புள்ளது. இந்த ஆல்காக்கள் அதிகளவு அம்மோனியா வாயுவை வெளியிடுவதால், மீன்கள் இறப்பதற்கும் காரணமாகின்றன. மேலும், கடல்பரப்பில் மாசினையும் இவை ஏற்படுத்த வல்லவை.

ஆல்காக்கள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கை, நாக்டிலூக்கா ஆல்காக்கள் வழக்கத்தைவிட அளவில் அதிகமாவதால் புவி வெப்பமயமாதல் துரித நிகழ்வாக மாறும் என்கிறது. அதேபோல், சென்ற ஆண்டு வெளியான ஒரு அறிக்கையில், மும்பையின் கடற்பரப்பில் இதுபோன்ற வண்ண ஒளிகள் மின்னியதற்கு இந்த ஆல்காக்களே காரணமென்றும், அரபிக்கடலின் மேற்பரப்பு வெப்பமடைந்ததும், ஊட்டச்சத்து இணைப்பு துண்டித்துப் போனதும் இந்தவகை ஆல்காக்கள் அதிகரித்ததே காரணமென்று சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்ற உயிரி வெளிச்ச நிகழ்வுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்படாத, புரியாத புதிராகவே இருக்கின்றன என்றாலும், லேசாக இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

2000-ஆம் ஆண்டுகளில் இருந்து இதுமாதிரி நிகழ்வுகள் அரபிக்கடலில் பலமுறை நடந்திருக்கின்றன. கோவா, மும்பை மற்றும் கேரளாவின் கழிமுகங்களிலும் இந்த கடல் வெளிச்ச நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘கும்பளாங்கி நைட்ஸ்’ என்ற மலையாளப் படத்திலும் இந்த ஆல்காக்கள் மின்னுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.