Advertisment

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Alert for 11 districts in next 3 hours

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (27.10.203) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை வர வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

Tamilnadu weather rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe