புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேராமற்றும் அவரது மகள் பேரா. எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி திருவனந்தபுரத்தில்இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்குநூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வரவேற்புநிகழ்ச்சியானது சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி, மதிமுகசார்பில் வந்தியத்தேவன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா,விசிக சார்பில் தொல்.திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட பல்வேறுகட்சியினர் கலந்து கொண்டனர்.
சேகுவாரா மகள் அலைடா குவேராவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி (படங்கள்)
Advertisment