Skip to main content

மது போதையில் தகராறு: கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற கூட்டாளிகள்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

Alcohol intoxication dispute; The allies who beat the mercenary!

 

ஊத்தங்கரை அருகே, மது போதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை அடித்துக்கொன்ற கூட்டாளிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). ஊத்தங்கரை ஊமையனூர் அருகே பெரிய தள்ளபாடியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்துவந்தார். 

 

இவருக்கு மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். செவ்வாய்க்கிழமை (24.08.2021) அன்று மாரியப்பன், சின்னதாளப்பட்டி புளியந்தோப்பு பகுதியில் சடலமாகக் கிடந்தார். அவருடைய உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

 

அந்த வழியாகச் சென்றவர்கள், இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். உடற்கூராய்வுக்காக சடலத்தை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆக. 24ஆம் தேதி, சடலம் கிடந்த இடத்தில் மாரியப்பன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஒரு கட்டத்தில் எல்லை மீறிய கைகலப்பால் ஆத்திரமடைந்த கூட்டாளிகள், மாரியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து கூட்டாளிகள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  

 

இச்சம்பவம் தொடர்பாக மாரியப்பனின் கூட்டாளிகள் மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்துவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.