Skip to main content

புதுச்சேரியில் மது பாட்டில்கள் கடத்தி விற்பனை செய்தவர்கள் கைது, கார் பறிமுதல்...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

alchol smuggler got arrested

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று (12/01/2021) மதியம் சேலம் சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர், அந்த காரில் இருந்த அட்டைப் பெட்டிகளை போலீசார் திறந்து பார்த்தபோது, சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 220 உயர் ரக மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

 

அந்த மது பாட்டில்கள், புதுவை மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது, அந்த பாட்டில் பண்டல்களை ஏற்றி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த தியாகராஜன், தங்கமணி ஆகிய 2 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

 

அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர், ‘பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. அதனால் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தோம்’ என கூறுகின்றனர்.

 

இதேபோல் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீசார் நேற்று ஆமூர் பகுதியில் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் உரிமையாளர் மங்கையர்க்கரசி, அவரது மகன் சக்திவேல் ஆகிய இருவரும் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

 

அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதைப்போன்றே திருக்கோவிலூர் அடுத்த குரங்கன்தாங்கல் கிராமத்தில் கள்ளச்சாராயத்தைப் பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருக்கோயிலூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக செல்வம், அவரது மகன் கிரண்குமார், அறுமுகன், முருகன்,  ஐயனார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பொங்கல் பண்டிகையின்போது தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உள்ளதால், அந்த மூன்று நாட்களில் விற்பனை செய்வதற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதுச்சேரி மது பாட்டில்களும் கள்ளச்சாராயமும் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யபவர்களைப் போலீசார் ஆங்காங்கே கைது செய்து வருகின்றனர். புதுச்சேரி சரக்கு கடத்தல் விற்பனை என்பது தமிழகத்தில் பல மாவட்டங்களில தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.