Skip to main content

அலைபாயுதே பட பாணி வாழ்க்கை - கர்ப்பிணி மகளை எரித்துக் கொலை செய்த அப்பா! 

Published on 16/05/2018 | Edited on 16/05/2018
trishy

 

 

திருச்சியில் பேக்கரி தீவிபத்தில் சிக்கியதாக முதலில் பரபரப்பாக பேசப்பட்ட கர்ப்பிணி பெண் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து அலைபாயுதே பாணியில் பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டே கர்ப்பிணியானது தெரிந்தும் மகளை  ஆத்திரத்தில் பெற்றோர் எரித்து கொலை செய்ய முயற்சித்தார்களா என மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது. 

 

திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் இவர் அப்பகுதியில் ரொம்ப காலமாகவே பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி மல்லிகா இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதல் திருமணம் செய்தவர்கள் இவர்களது மகள் சுவாதி (27). 

 

இவர் திருச்சியில் சிறப்பு காவல் படை போலீசில் பணியாற்றும் தங்கவேல் திருச்சி எடத்தெரு பகுதிக்கு அடிக்கடி வரும் போது பேக்கரியில் இருக்கும் சுவாதியை பார்த்த்தும் காதலிக்க ஆரம்பித்து காதல் வீட்டிக்கு தெரியாமல் அலைபாயுதே காதல் போன்று கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி வீட்டிற்கு தெரியாமல் முறைப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள். 

 

திருமணம் ஆனாலும் தன் தாயின் வீட்டிலே இருந்தாலும் அடிக்கடி காதல் திருமணம் செய்த கணவரை பார்க்க அடிக்கடி வெளியே செல்வாராம் இதன் விளைவு சுவாதி 8 மாத நிறைமாத கர்ப்பிணி ஆனால் வயிறு பெரிதாக வீட்டிக்கு தெரியாமல் இருக்க எவ்வளவோ முயன்றும் கடைசியில் தாயிடம் உண்மையை சொல்லி எப்படியும் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி கொடுங்க என்று கெஞ்சியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பாவிற்கு விசயம் தெரிந்தவுடன் வீட்டில் பெரிய ரகலையே நடந்திருக்கிறது. பிரச்சனையின் கடைசியில் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் என்று சொல்லி பிரச்சனையை தள்ளி போட்டிருக்கிறார் அப்பா சேகர். 

 

 

வீட்டில் பிரச்சனையை பேசி விட்டேன். விரைவில் என்னுடைய பெண்ணை உங்க வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி சுவாதியின் தாய் தன் மருமகன் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். 

 

அப்போது கடையில் இருந்திருக்கிறார் சேகர். ஏற்கனவே தனக்கு தெரியாமல் திருமணம் செய்திருப்பதை கேள்வி பட்டு ஆத்திரத்தில் இருந்த சேகர். தன் மகள் 8 மாத கர்ப்பம் என்பதை தெரிந்ததும் இன்னும் ஆத்திரப்பட்டிருக்கிறார். இதற்கு இடையில் இன்று தனக்கு தெரியாமல் மகளும் தாயும், காதலன் வீட்டுக்கு சென்றிருப்பதை கேள்விப்பட்டு  ஆத்திரம் அடைந்து இருவரையும் தீ வைத்து கொளுத்திவிட தீர்மானித்து ஏற்கனவே பெட்ரோல் வாங்கி பேக்கரி முழுவதும் ஊற்றி கையில் அவர்கள் உள்ளே நுழைந்ததும் லைட்டரை வைத்து கொன்று விட தயாராக இருந்திருக்கிறார். 

 

sen

 

வழக்கம் போல் தாய், மகள் இருவரும் கடைக்கு வந்திருக்கிறார்கள். இரவு 10.30 மணியளவில் கடையை மூடும்போது அப்பா சேகர் மகளை அழைத்து அந்த பிரிட்ஜ்ஜை திறந்து ஒரு பொருளை எடுக்க சொல்லியிருக்கிறார். அப்பா சொன்னதை கேட்டு சென்று சுவாதி ஃபிரிட்ஜை திறந்தாராம்.  இதில் ஸ்வாதி மீதும், அவரது தாய் மல்லிகா மீது தீப்பிடித்தது. அப்போது வந்த சேகர் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்வது போல் நடித்து லேசான காயமடைந்தாராம். அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு திருச்சி ஜிஹெச்சில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த ஸ்வாதி, மல்லிகா இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்புத்துறையினர் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். 

 

 

தகவலறிந்த ஸ்வாதியின் கணவர் தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. 

 

இந்நிலையில் திருச்சி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்று ஸ்வாதி, மல்லிகா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். ஸ்வாதி எட்டு மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு தாய் மல்லிகா சிகிச்சை பலம் அளிக்காமல் இறந்து போனார்.

 

மகள் சுவாதியும் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற அரசு மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

 

கைதான சேகர், நேற்று மாலை திருச்சி 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் சேகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.