அலங்காநல்லூர் பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யபட்ட CCtv காட்சிகள் வெளியீடு... மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்த கொடூரம்...

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வசித்து வரும் பைனான்சியர் இளங்கோவன் கடந்த வெள்ளிக்கிழமை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்

alanganallur case cctv footage

இதன் CCtv காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் இரு சக்கர வாகனத்தில் வரும் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலில் 4 நபர் முகமூடி அணிந்து கொண்டு வீட்டின் முன் நின்ற இளங்கோவனை கத்தி, அரிவாள், போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்து விட்டு தப்பிய நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பாகியுள்ளது

காவல்துறை நடத்திய விசாரணையில் அவரின் இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது

கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Alanganallur madurai
இதையும் படியுங்கள்
Subscribe