மே 1, தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்குமாரின் 48வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடி வருகின்றனர். அவர் பிறந்த கேரளா மாநிலத்திலும் கொண்டாடிவருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு அஜித்குமார், தனது ரசிகர் மன்றங்களை கலைத்த பின்பும் அவரது தீவிர ரசிகர்கள் அங்கங்கு அவரது பிறந்த நாளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அந்த வரிசையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆம்பூர் நகர அஜித் குமார் ரசிகர் மன்றம் சார்பில் நகர தலைவர் ரஞ்சித் குமார் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர். அதோடு, அங்கு வரவைக்கப்பட்டுயிருந்த மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு, எழுதுகோல் வழங்கினர்.
அதோடு, அண்ணா பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவர்கள் அனைவரும் அஜித்குமார் ரசிகர்களான உள்ளனர். தங்களுக்கு பிடித்தமான நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1, ஒருநாள் முழுவதும் ஆட்டோக்கள் இலவசமாக பயனாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடும் நாங்கள் மேலும் பல பிறந்தநாளை அவருக்காக கொண்டாடி இதுபோன்று மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்வோம் என்று உறுதி ஏற்றுக்கொண்டனர்.
ADVERTISEMENT
Show comments