திருச்சி - சென்னை தேசியசாலையில் உளுந்தூர்பேட்டை அருகே பஞ்சர் கடை வைத்துள்ளார் பழனிவேல். இவர் டயர்களுக்கு காற்று நிரப்பும் டேங்கில் என்ஜின் மூலம் காற்று நிரப்பி கொண்டிருந்தார். அப்போது காற்றின் அழுத்தம் தாங்காமல் அந்த டேங்க் வெடித்தது. இதனால் அங்கே பெரிய வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் எழுந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதை கேட்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது, பழனிவேலும் அவரது நண்பருக்கும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பழனிவேலின் வலது கால் முழங்கால் வரை துண்டாகி போனது. அவரது நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு தலைமைமருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.