The Air India flight was delayed by 15 hours!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (13/09/2022) நண்பகலில் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் 15 மணி நேர காத்திருப்புக்கு பிறகு இன்று (14/09/2022) அதிகாலை புறப்பட்டு சென்றது.

Advertisment

ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பின் மதியம் 12.50 மணிக்கு குவைத் புறப்படும். அந்த விமானத்திற்காக பயணிகள் நேற்று காத்திருந்தனர். ஆனால் பல மணி நேரமாகியும் விமானம் வந்து சேராததுடன், அது குறித்த தகவல்களும் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதையடுத்து பயணிகள் தங்குவதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்தது. இதற்கிடையில், தொழிற்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த விமானம் 15 மணி நேரம் கழித்து இன்று அதிகாலை 01.00 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்தது. இதைத்தொடர்ந்து, 02.00 மணியளவில் விமானம் புறப்பட்டு சென்றது.