காட்டேரி பகுதியில் விமானப்படை தளபதி, தமிழக டிஜிபி ஆகியோர் ஆய்வு!

Air Force Commander, Tamil Nadu DGP inspects

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

nilgiri

இந்நிலையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் விமானப்படை தளபதி வி.சவுத்ரி நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

DGPsylendrababu helicopter inspection nilgiris
இதையும் படியுங்கள்
Subscribe