Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறைக்கு வராதது ஏமாற்றமளிக்கிறது - ஈஸ்வரன்

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
er


எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறைக்கு வராதது ஏமாற்றமளிக்கிறது  என்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர்  ஈஸ்வரன். இது குறித்த அவரது அறிக்கை:

’’தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடம் நீண்ட இழுபறிகளுக்கு பிறகு நேற்றைய தினம் மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தமிழக முதலமைச்சர்  அறிவித்திருப்பது கொங்கு மண்டல மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

சாயக்கழிவு மற்றும் தோல் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய், மலட்டுத்தன்மை, தோல் நோய் உள்ளிட்ட இன்னும் பல்வேறு நோய்களால் கொங்கு மண்டல மக்கள் அதிக அளவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நோய்களை குணப்படுத்துவதற்காக தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெற மருத்துவமனைகளை தேடி கொங்கு மண்டல மக்கள் தொலைதூரம் சென்று கொண்டிருக்கும் சூழலில் தான், மத்திய அரசு தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து கள ஆய்வுகள் நடத்தி 5 இடங்களை தேர்வு செய்தது. அந்த 5 இடங்களில் கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டம் பெருந்துறையும் இடம்பெற்றது. 

 

அதிக அளவில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தான் அமைக்கப்பட வேண்டுமென்ற கூக்குரல் கொங்கு மண்டலம் முழுவதும் ஒலித்தது. பலதரப்பட்ட ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் ஈரோட்டில் தான் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் இருக்கிறது என்று வெளிகாட்டிய போதும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தங்கள் பகுதி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளை உணர்ந்து கொங்கு மண்டல அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் அமைக்க வேண்டுமென்று குரல் கொடுத்திருக்க வேண்டும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் எதிர்கால சந்ததிகளையாவது புற்றுநோயிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் ஏன் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிய விளக்கத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் தெளிவுப்படுத்தி இருந்தால் மதுரைக்கு போயிருக்காது. ’’

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் தப்பிய ரவுடிகளை நெல்லையில் சுற்றி வளைத்த போலீசார்

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
The police surrounded the who escaped in Erode
சிவசுப்பு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேல காடுவெட்டி என்ற பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி இசக்கி பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் மருகாபூரியைச் சேர்ந்த சிவசுப்பு, முத்து மணிகண்டன், சூர்யா, வசந்த குமார், இசக்கி பாண்டி உள்ளிட்ட 5 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருந்துள்ளனர். இது குறித்து திருநெல்வேலி போலீசாருக்கு நேற்று (04.01.2024) மதியம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து செல்போன் சிக்னலை கொண்டு சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலை பிடிக்க நேற்று திருநெல்வேலி தனிப்படை போலீசார் பெருந்துறைக்குச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ மற்றும் 6 போலீசார் ரவுடி கும்பலை சுற்றி வளைக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் ரவுடி கும்பல் போலீசாரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ரவுடி சிவசுப்பு அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதே சமயம் அரிவாளை காட்டி போலீசாரிடம் இருந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இது குறித்து உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து காவல்துறையினரும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஈரோட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், பெருந்துறையில் இருந்து தப்பிய ரவுடிகள் 5 பேரில் 2 பேர் நெல்லை அருகே பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவசுப்பு மீது திருநெல்வேலி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை என  20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு; ஈரோட்டில் பரபரப்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Erode district perundurai area incident by tirunelveli police 

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சிவசுப்பு என்பவர் உள்ளிட்ட 5 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருந்துள்ளனர். இது குறித்து திருநெல்வேலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலை பிடிக்க திருநெல்வேலி தனிப்படை போலீசார் பெருந்துறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ மற்றும் 6 போலீசார் ரவுடி கும்பலை சுற்றி வளைக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் ரவுடி கும்பல் போலீசாரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ரவுடி சிவசுப்பு அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதே சமயம் அரிவாளை காட்டி போலீசாரிடம் இருந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.