தமிழகம் முழுவதும் அதிமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடக்கம் 

AIADMK's massive protest begins across Tamil Nadu

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு செய்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறுகிறது. அந்த வகையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், மதுரை சிம்மக்கல்லில் செல்லூர் ராஜு தலைமையிலும், விழுப்புரத்தில் சிவி சண்முகம் தலைமையிலும் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

admk jayakumar
இதையும் படியுங்கள்
Subscribe