Skip to main content

அதிமுகவிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்காங்க சார்....! –மக்கள் பணியில் ஈரோடு அதிமுக நிர்வாகி 

Published on 02/05/2020 | Edited on 03/05/2020

கரோனா காலம்.. நடுத்தர மற்றும் கூலி வேலைக்கு செல்லும் அடித்தள மக்கள் வாழ்வியலை படுபாதாளத்தில் தள்ளி விட்டது. ஊரடங்கு பொது முடக்கம். ஒட்டப் பந்தைய வீரனின் கால்களை உடைத்து போட்டது போல் என்றென்றும் உழைக்கும் வர்க்கமான தொழிலாளிகளை முழுமையாக முடக்கி விட்டது.


குறிப்பாக ஈரோடு மாவட்டம் கரும்பு, மஞ்சள், நெல் என விவசாயமும், கைத்தறி, விசைத்தறி என ஜவுளி உற்பத்தியும் செய்யப்படும் பகுதி. ஈரோட்டில் ஜவுளி சந்தையும், மஞ்சள் மார்கெட்டும் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. அப்படிப்பட்ட இந்த தொழில்களில் நேரடியாகவும் மறைக்க மாகவும் பத்து லட்சம் பேர் ஈடுபட்டு அதன் மூலம் வாழ்கிறார்கள். இதில் எட்டு லட்சம் பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள். இத்தொழில்களில் ஈடுபட்டு அன்றாடம் கிடைக்கும் உழைப்பின் ஊதியத்தால் குடும்ப வறுமையை போக்குபவர்கள்.

 

AIADMK In work on Erode


இப்போது அவர்கள் சொல்லவொன்னா துயரத்தில் உள்ளார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் மட்டுமே கிடைத்தது. அ.தி.மு.க.வின் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. தென்னரசு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம் ஆகிய இருவரும் அரசு கொடுத்த சில உதவிகளை தாங்களே நேரடியாக கொடுப்பதுபோல புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு போக இந்த ஈரோட்டில், அந்த அ.தி.மு.க.வில் உள்ள ஒரு நிர்வாகி மட்டும் தன் சொந்த பணத்தை செலவழித்து தினம்தோறும் மக்களுக்கு தேவையானதை கொடுத்து வருகிறார் என்றால் அது விந்தையான செய்திதான் ஆனால் அதுவே உண்மை.

அ.தி.மு.க.வின் ஈரோடு மாநகர செயலாளராக சில காலமும், மாநகராட்சி மண்டல தலைவராகவும், இப்போது பகுதி செயலாளராக இருப்பவர் பெரியார்நகர் மனோகரன் இவர்தான் மக்கள் பணியில் அர்பணிப்போடு ஈடுபட்டு வருகிறார்.

 

AIADMK In work on Erode


கட்சி பணம் கொடுக்கும், அரசு செய்யும் என்று எதையும் எதிர்பாராமல் இந்த 40 நாட்களும் ஒவ்வொரு நாளும் காலை, பிற்பகல், மாலை என மூன்று வேளையும் சுமார் 10 தன்னார்வலர்களை வைத்து சாலையில் ஆதரவற்று இருக்கும் பொதுமக்கள் முதல் கரோனாவை விரட்ட உறுதுணையாக இருக்கும் காவலர்கள் வரை மூலிகை சூப் கொடுப்பதோடு, மதியம், இரவு என இரண்டு வேலையும் கூலி தொழிலாளர்கள் வீடுகளுக்கே சென்று உணவு வழங்குகிறார். அதே போல் ஒவ்வொரு வீட்டுக்கும் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் என பாரபட்சமின்றி வழங்கி வருகிறார். அதேபோல் ஈரோடு நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் எல்லோருக்கும் பேண்ட், சர்ட், சேலைகள், பாதுகாப்பு உபகரணங்கள் என பலவற்றை வழங்கி வருகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருத்தாலும் மக்களுக்கு கொடுக்க மனம் இல்லை ஆனால் பெரிய பதவிகள் எதையும் வகிக்காமல் மக்களுக்கு உதவிகள் இந்த பெரியார்நகர் மனோகரன் போன்ற சிலரால்தான் அடித்தள மக்கள் அ.தி.மு.க.வில் ஒரு வித ஈர்ப்போடு இருக்கிறார்கள் என வெளிப்படையாக கூறுகிறார்கள் ஈரோடு ர.ர.க்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.