df

Advertisment

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இப்போதே கூட்டணி தொடர்பாக அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் தினமும் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

"தனித்து நிற்கவே நாங்கள் விரும்புகிறோம், சசிகலாவின் வருகை அ.தி.மு.கவில் மாற்றத்தை ஏற்படுத்தும்" எனத் தே.மு.தி.கவின் பிரேமலதா விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு கருத்துத் தெரிவித்திருந்தார்.இது அ.தி.மு.க தரப்பை சூடேற்றியது. பா.ம.க தரப்பிலும் முதல்வர் மேல் அதிருப்தியில் இருப்பதாகச் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இதையும் தாண்டி பா.ஜ.க தரப்பில் அ.தி.மு.க அரசைத் தொடர்ந்து சில முக்கிய நிர்வாகிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அதற்கு எதிர்வினையாற்றி வருகிறார். இதற்கிடையே கூட்டணி தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் அ.தி.மு.க உடன் கூட்டணி தொடர்வதாகவும், எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதுஒருபுறம் இருக்க மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறாது என்று மாநிலங்களவை எம்.பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இவரின் இந்தக் கருத்து அ.தி.மு.கவில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் அனலைக் கூட்டியுள்ளது.