Skip to main content

சட்ட ஒழுங்கு சரியில்லை; ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுகவினர் பேரணி 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

 AIADMK will go rally and petition  Governor saying that law and order issue TamilNadu

 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி அதிமுகவினர் பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளனர். 

 

விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்ன மலையிலிருந்து பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளனர். இந்த பேரணியில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பேரணி தொடங்கவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்