Skip to main content

டாஸ்மாக் கடையில் குவிந்த அதிமுக தொண்டர்கள் 

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

 

aiadmk


 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தலைக்கு 500, 1000 ரூபாய் என கொடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ர.ர.க்கள் அழைத்து வரப்பட்டனர். 
 

கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் சில ர.ர.க்கள் வந்த பேருந்துகள் நந்தனம் செல்ல முடியாமல் மெரினா கடற்கரைக்கு சென்றன. அங்கு ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி ர.ர.க்கள், கலைவாணர் அரங்கம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிந்தனர். இவர்கள் நந்தனத்துக்கு செல்லாமலேயே இங்கேயே விழாவை கொண்டாடினார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

புதுச்சேரியில் ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்துள்ளது பங்கூர். அந்த பகுதியில் பிரபு என்பவர் ஷங்கர் ஒயின்ஸ் என்ற தனியார் ஒயின்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பத்து மணிக்கு அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவர் கீழே இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை கடையின் மீது வீசினார். அது பயங்கர சட்டத்துடன் வெடித்துச் சிதறியது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீசியது அதியூர் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பது தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள இளைஞர் செல்வாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

Next Story

சென்னை மாநகராட்சியின் சுகாதார நிலைக்குழு உறுப்பினர் தேர்வு (படங்கள்)

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

சென்னை மாநகராட்சியின் சுகாதார நிலைக்குழு உறுப்பினராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 144வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி. ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். வெற்றி பெற்ற ஜி. ஸ்டாலின், சான்றிதழை சென்னை மேயரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.