திருப்பரங்குன்றத்தில் அதிமுகதான்....காரணம்?- கேபி.முனுசாமி பேட்டி

மதுரை வில்லாபுரத்தில் அதிமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டஅதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமிசெய்தியாளர்களைச் சந்தித்தார்.

 The AIADMK in Tiruparangkundan .... Reason? - KP.Munusamy interview

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது அவர் பேசுகையில்,

அதிமுக வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள். இந்த நான்கு சட்டமன்ற தொகுதியில் குறிப்பாக திருப்பரங்குன்றம்சட்டமன்ற தொகுதியில் கிட்டத்தட்ட நமது வருவாய்த்துறை அமைச்சர் சொன்னது போல ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உறுதியாக எங்களுடைய வேட்பாளர் முனியாண்டி அவர்கள் வெற்றி பெறுவார். அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற இபிஎஸ் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியினை, திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து வருகிறார்கள். தனி மனித உரிமைகளுக்கு அதிமுக அரசு மிகப்பெரிய அளவில் பாதுகாவலராக இருந்து கொண்டிருக்கிறது. எனவே தங்களுடைய வாக்குகளைதங்களைப் பாதுகாக்கக் கூடிய இந்த அரசுக்குதான் அளிப்போம்என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் எனக்கூறினார்.

admk byelection KPmunuswamy Thiruparankundram
இதையும் படியுங்கள்
Subscribe