மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மாணவரணி மாவட்டச் செயலாளர் ஆவின்சேர்மன் கார்த்திகேயன் தலைமையில் அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் சகாதேவ பாண்டியன், கவுன்சிலர் அரவிந்த், அதிமுக வட்டச் செயலாளர்கள், பல்வேறுஅணிகளின்செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.