Skip to main content

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அ.தி.மு.க தீர்மானம்... ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தது இந்தி...

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

AIADMK resolution on two language policy .. Hindi entered the Collector's office ..

 

இன்று நடந்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் இருமொழிக் கொள்கை தான் சிறந்தது என்று ஆளும் அ.தி.மு.க கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இந்தி நுழைந்துவிட்டது.

 

புதுக்கோட்டை மாவட்ட விவாயிகள் குறை தீர்வுக் கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் உமாமகேஸ்வரி, 13 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 240 விவசாயிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கும்போது மாவட்ட ஆட்சியருக்குப் பின்னால் இருந்த மாவட்டத்தின் அடையாளமான ஆட்சியர் அலுவலகம் (கோட்டை) படத்துடன் புதுக்கோட்டை என்று தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் மாவட்டத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது. 

 

இதைப் பார்த்த விவசாயிகள் மெல்ல மெல்ல புதுக்'கோட்டை'க்குள்ளும் இந்தி நுழையத் தொடங்கிவிட்டது, இருமொழிக் கொள்கை என்பது எல்லாம் கண்துடைப்பா என்று முனுமுனுத்தனர்.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, இது வழக்கமாக விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கு இல்லை. காணொளி மூலம் கூட்டம் நடப்பதால் மத்திய அரசுப் பணிகள், ஆய்வுகள், காணொளிக் கூட்டங்கள் நடக்கும் அறையில்தான் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்தப் பதாகை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நிரந்தரமாக உள்ள பதாகைதான் என்றனர். எப்படியோ தமிழ்நாட்டில், ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பது சரியாகத்தான் உள்ளது என்றார்கள் விவசாயிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு லட்சம் மாணவர்களுடன் புத்தகம் வாசித்து மாணவர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தக திருவிழா நிகழ்வு வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை 80 அரங்குகளில் பல லட்சம் புத்தங்களோடு நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய ஆளுமைகள், அரசு உயரதிகாரிகள், படைப்பாளிகளின் சொற்பொழிவுகள், சாதனையாளர்களுக்கு விருதுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இதற்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களான நூறு நாள் வேலைத்திட்டப் பகுதிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று ஒரு மணி நேரம் வாசிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நிகழ்வில் ஒரு லட்சம் மாணவ மாணவியர்களோடு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்று புத்தகம் வாசித்தார்.   

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி. நினைவாற்றலை மேலும் வளர்க்கும், படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படக்கூடும். உலகில் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினாலும் உருவானவர்களே. இன்றைய விஞ்ஞான உலகில் மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆகையால் இன்றைய குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதன் நன்மைகளையும் எடுத்துரைத்து புத்தகம் வாசிக்கத் தூண்ட வேண்டும். அதிலும் மிக முக்கியமாக மாணவிகள் வாசிக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசித்தனர்.

 

 

 

Next Story

மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி அமைச்சர் ஆறுதல்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

Minister comforts the family of the girl who passed away due to lightning

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஒத்தாங்கொல்லை பகுதியை சேர்ந்த கோபு சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வித்யா (31), மகள் பவ்யாஸ்ரீ (2). இருவரையும் ஊரில் விட்டுவிட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

கடந்த வாரம் வித்யா உறவினர் வீட்டு விசேசத்திற்கு சென்று மாலை வீடு திரும்பியவர் மழை வரும் போல் இருந்ததால் வீட்டு வாசலில் கொட்டிக்கிடந்த காய்ந்த இலைகளை கூட்டிக் கொண்டிருந்த போது திடீரென அருகில் நின்ற புளிய மரத்தில் தாக்கிய மி்ன்னல் வித்யாவையும் தாக்கி உடலையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் கருக்கியது. அக்கம்பக்கத்தினர் வித்யாவை மருததுவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடியும் பயனில்லை. மின்னல் தாக்கிய வேகத்திலேயே உயிர் போய்விட்டிருந்தது. இதனால் ஊரே சோகத்தில் மூழ்கிய நிலையில் சிங்கப்பூரில் இருந்த கணவர் கோபுவும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

 

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வளர்மதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். 2 வயது கைக்குழந்தையோடு கண்ணீர் மல்க நிவாரணக் காசோலையைப் பெற்றுக்கொண்ட கோபு பேச முடியாமல் குமுறியது அனைவரையும் கரைய வைத்தது.