/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk3232.jpg)
திமுகஆட்சிக்கு வந்தபின் முதன்முறையாக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுகஅரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் -டீசல் விலை குறைப்புஉள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சிதுணைத் தலைவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம்;சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி; கோபிச்செட்டிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்; திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்;கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு;சென்னை கே.கே.நகரில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)