Advertisment

அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

காவரி மேலாண்மை வாரியத்திற்காக அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காலதாமதமாக செய்யும் நடவடிக்கையாகத்தான் தெரிகிறது. உண்ணாவிரதம் எல்லாம் இந்த காலகட்டத்தில் பலிக்குமா என்று தெரியவில்லை. என்னுடைய கருத்து இவர்கள் மிக மிக அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கம் வேண்டும் என்பது தான்.

அழுத்தம் என்பது தியாகம் செய்ய வேண்டும். பதவியை ராஜினாமா செய்ய முன்வர வேண்டும். ராஜினாமா செய்தால் பாராட்டுக்குறியவர்கள். போராட வேண்டிய நிலை வந்துள்ளது. திமுக அறிவித்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள நீதி மய்யம் சார்பில் வேறு யாராவது கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

cauvery kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe