Advertisment

ராஜினாமா தீர்வாக அமையுமா? அதிமுக எம்.பி. கேள்வி

V Maitreyan

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் அந்த நிர்பந்தம் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் தலைமை ஆணையிட்டால் முதல் நபராக ராஜினாமா செய்ய நான் தயார். அதைப்போலவே அனைத்து எம்பிக்களும் தயாராக இருப்பார்கள். ஆனால் அது தீர்வாக அமையுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

AIADMK MP QUESTION V Maitreyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe