Skip to main content

ராஜினாமா தீர்வாக அமையுமா? அதிமுக எம்.பி. கேள்வி

Published on 05/03/2018 | Edited on 05/03/2018


 

V Maitreyan


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் அந்த நிர்பந்தம் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் தலைமை ஆணையிட்டால் முதல் நபராக ராஜினாமா செய்ய நான் தயார். அதைப்போலவே அனைத்து எம்பிக்களும் தயாராக இருப்பார்கள். ஆனால் அது தீர்வாக அமையுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் இணையும் அதிமுகவின் முன்னாள் எம்.பி மைத்ரேயன் 

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

Former AIADMK MP Maitreyan joining BJP

 

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கட்சிக்குள் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார். பின்பு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவரது அணியில் இருந்தார். பின்னர் பல்வேறு சர்ச்சையின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அணியின் பக்கம் வந்தார். 

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மைத்ரேயனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதற்காக மைத்ரேயன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Next Story

'அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன் நீக்கம்'- எடப்பாடி பழனிசாமி உத்தரவு! 

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

'Removal of Maitreya from ADMK'- Edappadi Palaniswami orders!

 

ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த நிலையில், மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறைக் குலையும் வகையில் நடந்துக் கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மைத்ரேயன், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.