ADVERTISEMENT

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது!   

05:17 PM Sep 24, 2019 | kalaimohan

ADVERTISEMENT

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக். 21 தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்.24 தேதி நடைபெறும் என்றும், செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான நேர்காணல் முடிந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT