Skip to main content

மகனை கதாநாயகனாக்க படம் எடுக்க தயாராகிறாரா அதிமுக அமைச்சர்?

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் கொங்கு ஏரியாக்கள் ரைட்ஸ் வாங்கி படத்தை வெளியிட்டு பெரும் லாபத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் மகன் திரைத்துறையில் இறங்கி தொடர்ச்சியாக பெரிய நடிகர்களின் படங்களை குறித்துவைத்து செயல்படுகிறார் என்கிறார்கள் திரைதுறையில். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் ஜீனியர் அமைச்சராக இருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி எம்.எல்.ஏவான அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

 

AIADMK minister son

 



இவரது இளையமகன் விஜய். பி.டெக் பட்டதாரியான இந்த 25 வயது இளைஞர், அரசியல் ஆர்வம்மில்லாமல் படித்துவிட்டு நண்பர்களோடு வலம் வந்துக்கொண்டுயிருந்தார். அப்பா அமைச்சரானதும், அவரது அரசியல் உதவியாளராக மகனே பொறுப்பு ஏற்றுக்கொண்டு அரசு சம்பளம் பெறுகிறார். அமைச்சரின் துறை நடவடிக்கைகள் சில உட்பட, அமைச்சருக்கான வரவு – செலவுகளை அவர் தான் கவனித்து வருகிறார். மகன் படித்தவர் என்பதால் அதிகாரிகள் சொல்வது சரிதானா என மகனிடம் கேட்டு உறுதி செய்துகொண்டே அமைச்சர் பணிகளை செய்கிறார்.

சென்னையின் பிரபல ஹோட்டல்களில் அதிகாரிகள், தொழிலதிபர்களுடனான சந்திப்பு போன்றவற்றை அமைச்சரின் மகன் நடத்துகிறார் எனக்கூறப்படுகிறது. அதோடு, சினிமாத்துறையினர் வாசமும் அந்த ஹோட்டல்களில் வீசுவதோடு, அவர்களின் நட்பும் அமைச்சரின் மகன் விஜய்க்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் சிலர் நீங்க சினிமா நடிகர்கள் போல் அழகாயிருக்கிங்க, படத்தில் நடிச்சா இன்னும் பெரிய அளவுக்கு உயரலாம், மக்களிடம் ஈஸியா ரீச்சாகலாம். பிற்காலத்தில் அரசியலில் உங்களுக்கு அது கை கொடுக்கும் என தூபம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, அமைச்சரின் மகன் மனதிலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 



இதுப்பற்றி நம்மிடம் பேசிய ஆரணி அதிமுகவினர். முதல் முறையா எம்.எல்.ஏவாகி, அமைச்சராகி இப்பத்தான் சம்பாதிச்சி வச்சியிருக்கார். பல வழிகளில் வந்த வருமானத்தை சில வழிகளில் முதலீடு செய்து பாதுகாப்பாயிருக்கார். கட்சியினர் உட்பட யாரையும் பண விஷயத்தில் ஏமாத்தாம இருக்கார். இந்த பேரோடு இருப்பதை விட்டுட்டு மகன் ஆசைப்படறானேன்னு சினிமா படம் எடுக்கறன், மகனை நாயகனாக்கறன்னு இறங்கனார்ன்னா அவ்வளவு தான், அவரோட நிலைமை என்றார்கள். அமைச்சர் மகன் நாயகனாகிறார் என்கிற பேச்சு அமைச்சர் தரப்பில் இருந்தே கிளம்பி மாவட்டத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Next Story

பொன்முடி விவகாரம்; ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு பரபரப்பு கடிதம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (14.03.2024) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.