Skip to main content

இதில் எந்த மாற்றமும் இல்லை... எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே இப்படித்தான் -முதல்வர் பழனிசாமி பேட்டி!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

AIADMK-led alliance in the coming elections - Chief Minister Edappadi interview

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் இன்று தஞ்சாவூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நலப்பணி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதேபோல் திருவாரூரிலும் கரோனா தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டார். காலையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 

எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க தலைமையில் தான் தேர்தலைச் சந்தித்து வருகிறோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. எனவே வரப்போகும் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் தான் களமிறங்குவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்